சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்க உள்ளார்.

கடந்த. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலையும் தனது கூட்டணி கட்சிகளுடன் சந்திக்க தி.மு.க. வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

விசிக  தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷத்துடன் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டதுடன், இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சிக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போதே மதுவிலக்கு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசியல் ஆர்வலர்கள் இடையே திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விடுவாரோ என்ற கேள்வில் எழுந்தது.. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விசிக சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது அரசியல் வட்டாரத்தில் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமாவளவன்

“அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு, நீக்கப்பட்டது எனக்கு தெரியாது. அட்மின் யாராவது செய்து இருப்பார்கள். நான் பார்த்து விட்டு சொல்கிறேன். பொதுவாக இதெல்லாம் காலம் காலமாக நாங்கள் சொல்லுகிற விஷயம்தான்”

என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (16ம் தேதி) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.