வால்பாறை

வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காணப்படுகிறத்  இதனால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 26) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.