டெல்லி: நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா உள்பட 16மசோதா தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவையில் நடைபெற உள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனித்தனியாக தாக்கல் செய்வார்.
இதையடடுத்து நாளை (பிப்ரவரி 1ந்தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி வணிகம் தவிர, 16 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது கட்டமாக , பட்ஜெட் முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக மார்ச் 10ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
முன்னதாக நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சிகள், அரசு, நாடாளுமன்ற குழுக்களை அரசியல் ஆக்குவதாகவும், பெரும்பான்மையை பயன்படுத்தி, தன் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டின.
அதோடு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறு மஹா கும்ப மேளாவை தவறாக நிர்வகித்தததன் காரணமாகவே, கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருவதால், ஜனவரி 31ஆம் தேதியன்று நாடாளுமன்ற கூட்டத்தில் விவாத அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்கள்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு தீர்மானித்துள்ளது.
1) வக்ஃப் (திருத்தம்) மசோதா,
2) வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா,
3) ரயில்வே (திருத்தம்) மசோதா,
4) பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா,
5) எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா,
6) விமானப் பொருள்கள் மசோதா மற்றும் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மீதான நலன்களைப் பாதுகாக்கும் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுதவிர,
2025-26 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
2024-25 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் இரண்டாம் மற்றும் இறுதித் தொகுதி மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
2021-22 ஆம் ஆண்டிற்கான அதிகப்படியான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல் உள்பட பல திருத்த மசோதா
கடல்சார் சட்டங்கள் புதுப்பிக்கப்படும், சரக்கு ஏற்றிச் செல்லும் மசோதா, கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கான மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா மற்றும் வணிக கப்பல் போக்குவரத்து மசோதா, 2024 ஆகியவை கப்பல் விதிகளை நவீனமயமாக்கும்.
எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா எண்ணெய் ஆய்வு மற்றும் பிரித்தெடுப்பை நிர்வகிக்கும் சட்டங்களில் புதுப்பிப்புகளை முன்மொழியும். பாய்லர்ஸ் மசோதா தொழில்துறை பயன்பாடுகளில் பாய்லர்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தும்.
மற்றொரு முக்கிய சட்டமன்ற முன்மொழிவு பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா ஆகும், இது பேரிடர் திட்டங்களை உருவாக்கும் பொறுப்பை மத்திய மற்றும் மாநில அளவிலான படைகளுக்கு மாற்றும், மேலும் இரண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உறுதி செய்யும், இது விரைவான மற்றும் திறமையான பதிலை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இவைகள் உள்பட மொத்தம் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.