டில்லி
விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜ்ன் கார்கே ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா என்னும் கூட்டணியை அமைத்துள்ளனர்.
இன்று இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார் இந்த கூட்டம் இன்று தலைநகர் டில்லியில் நடைபெற உள்ளது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
[youtube-feed feed=1]