டில்லி

ளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு  ஆண்டும் தேசிய தகுதித் தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.   நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான  நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஏப்ரல் 6 முதல் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.  தேசிய தேர்வு முகமை இதற்கான கடைசி நாள் மே 6ம் தேதி எனத் தெரிவித்திருந்தது.  பிறகு இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு புதிதாகத் தேர்வுக்கான நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டு அதன்படி 20 நிமிடம் கூடுதலாகத் தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக விண்ணபிக்கும் பணி இன்றுடன் நிறைவு  பெறுகிறது.  மேலும் இது தொடர்பான  விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.