சென்னை

ன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வந்ததை காண் முடிந்தது. சென்றத ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது.

இது எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி அந்த நிலையையும் எட்டியது.  அதன்படி கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலைமேலும் உயர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  aதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.7,810 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே வேளையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]