சென்னை

ன்று சூலூர்பேட்டை மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 7-ந்தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 7-ந்தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 10.15, மதியம் 12.10, 1.15 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1, 1.15, 3.10 இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து இன்று மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.