மோரிகான்
இன்று அதிகாலை அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதை போல் அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய புவியியல் ஆய்வு மையம் இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சேதம் குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை.
Patrikai.com official YouTube Channel