சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக மையம் அறிவித்துள்ளது.

”இன்று தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்ல் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.”

என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.