தூத்துக்குடி

ன்று மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.  இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இந்த வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது., பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இங்கு மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இந்த கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதி கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறது. இந்தக் குழு தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையில் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட , பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. குழு தனது ஆய்வுக்குப் பின் வெள்ள பாதிப்பு விவரங்களை மத்திய அரசுக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க உள்ளது.