பெங்களூரு

ன்று பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்குகிறது.

இதுவரை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இருதியாக கடந்த 2023-ம் ஆண்டு விமான கண்காட்சி நடந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது.

இந்த விமான கண்காட்சி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.  பெங்களூருவில் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது.

விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்  இதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவ அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இந்த விமான கண்காட்சியானது இன்று முதல் தொடங்க உள்ளதால் நேற்று முதல் அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.