திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 7,167 மற்றும் மகாராஷ்டிராவில் 1,172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,11,078 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,40,216 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,399 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,50,585 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,658 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 49,68,657 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 31,681 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,439 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,57,181 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,266 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.