சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவல் இன்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில்  3,035 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை  92,567 பேர்  நோயில் இருந்து விடுபட்டு  வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.93% ஆக உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  78,573ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 105 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 15,85,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44,560 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,328 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
மகாராஷ்டிரா –  03, கேரளா – 06, கர்நாடகா – 11,  தெலுங்கானா – 03, ஆந்திரப்பிரதேசம் – 02, பீகார் – 01, பஞ்சாப் – 01,. புதுச்சேரி – 07. சத்தீஸ்கர் – 01. குஜராத் – 01. ஒடிசா – 04.  மேற்குவங்கம் – 01
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
குவைத் – 05, ஓமன் – 02, சவூதி அரேபியா – 06, ஐக்கிய அரபு நாடுகள் – 03, கெய்கிஸ்டான் – 01