டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 402 டில்லியில் 939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,79,339 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,082 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 412 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,68,279 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,18,747 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,329 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 1,434 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,99,683 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 8,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.