சென்னை

மிழகத்தில் இன்று 3,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,53,390  கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,37,89,460 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் 3 பேர்  வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  25,03,481  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 73 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 33,132 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,855  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,32,017  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 34,477  பேர் சிகிச்சையில் உள்ளனர்.