டாக்

ன்று மதியம் லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது அவ்வரிசையில் லடாக்கில் இன்று மதியம் 1.40 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி மதியம் 1.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 32.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.69 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.