சென்னை

மிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,55,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,03,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,76,50,087 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 19 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 19 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,51,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,805 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 674 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,06,370 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 12,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.