சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுது. இதை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மிழகத்தில் இன்று புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 8,15,175 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும்,  11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,080 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,074 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரைகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,94,228 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் தற்போது 8,867 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகபட்சமாக சென்னையில் இன்று  285 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.