சென்னை:
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு காரணமாக தமிழக அரசின் மின்வாரியத்துறைக்கு ஆண்டுக்கு அருவாய் 527 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கான ஆறு சதவீத ஊதிய உயர்வை அனைத்து தொழிற்சங்கர்களும் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel