சென்னை

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மையங்களில் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதி முடிந்தது. நாளை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்து சுமார் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சுமார் 40,000 காவல்துறையினர்  வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்க்ளில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக் மின்சார வாரியம் அனைத்து செயற் பொறியாளார்களுக்கும்,:

“வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுதினம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால்,  விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்”

என்று அறிவுறுத்தியுள்ளது.