சென்னை
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வழங்க உள்ளது.

பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து விட்டது.
இதனுடன்டன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளதால் இந்த விவகாரத்தில் திடீர் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10-ந்தேதியே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த மாதம் வருகிற 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்கி விடலாம் என முடிவு எடுத்துள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு, இந்த மாதம் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]