சென்னை
தமிழக அரசு திருவண்ணமலை கோவிலின் பெயர் மாற்றப்ப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மிக பிரபலாமன கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இதனை பகிர்ந்து வருவதால் இது இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் இது குறித்து,
:இது முற்றிலும் பொய்யான தகவல். ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், “1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட ‘திருவண்ணாமலை வரலாறு’ என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது” என்று கூறியுள்ளார்”.
என அறிவித்துள்ளது.