விருதுநகர்

மிழக அரசு விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரி உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் டைடல் பூங்கா திறக்கப்படுகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.

தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக அமைய உள்ளஇந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த கட்டுமான பணிகளை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட்டுள்ளது.

இந்த மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.