திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடி ரூ.1.36 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் செலுத்திய 4,400 கிலோ தலைமுடி காணிக்கை ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

தரம் பிரிக்கப்பட்டு விடப்பட்ட ஏலம் மூலம் ரூ.1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.