வாஷிங்டன்

டிக்டாக் செயலி அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகளவில் பிரபலாமக உள்ள ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாகும். இதை வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.  இந்த செயலியை சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.

இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 17 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அதன் நிறுவனம் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தது. அதில் டிக்டாக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டிக்டாக் செயலியை வழக்கம்போல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. இன்று அமெரிக்க அதிஒஅராஜக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் ‘டிக்டாக்’ செயலி மீண்டும் அனுமதிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.