தமிழ்நாட்டின் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆகிய மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக உஷ்ணம் சற்று குறைந்துள்ளது.

அதேவேளையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் கோடை மழையும் பெய்து வருவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து இம்மாவட்ட மக்கள் தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதை அடுத்து இம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.