மும்பையில் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 5 கோடி ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் பாபா சித்திக்கை விட மோசமான விளைவை சந்திப்பார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸப்பிற்கு வந்துள்ள இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஸ்னாய் பெயரில் வந்திருக்கும் இந்த மிரட்டலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாதாக்களின் பிடியில் இருந்து பாலிவுட் கடந்த சில ஆண்டுகளாக மீண்டுள்ளதாக நினைக்கப்படும் வேளையில் சல்மான்கானுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டல்கள் காரணமாக தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் சல்மான் கானுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.