ட்லாண்டிக்

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைக் காணச்சென்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த 1912ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

பல ஆண்டுகளாக இந்த ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களைப் பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு 21 அடி நீளத்தில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டு. பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டண வசூலிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது. இதில் ஹமிஷ் ஹார்டிங் (58) பிரிட்டனைச் சேர்ந்த கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவர், ஷாசாதா தாவூத் (48) பாகிஸ்தானின் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது மகன் 19 வயதான சுலைமான் தாவூத், பால் ஹென்றி – பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் பைலட், ஸ்டாக்டன் ரஷ், (61), டைட்டானிக் பயணங்களை இயக்கும் நிறுவனமான ஓஷன் கேட்டின் தலைமை நிர்வாகி ஆகியோர் பயணித்துள்ளனர்.

இவர்களின் பயணம் எதிர்பார்த்ததுபோல் அமையாமல் சரியாக 1 மணி நேர 45 ஆவது நிமிடத்தில் நீர்மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை அட்லாண்டிக் கடலில் இழந்தது நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் அமெரிக்கா – கனடாவின் கடற்படை ஈடுபட்டது. இந்நிலையில் நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி 5 பேரும் உயிரிழந்ததாகக் கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.