இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை எழுந்துள்ளது. கடந்த சில நாள்களாக தொற்று மேலும் அதிகரித்து வருகின்றது.

ஒரேநாளில் 105 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 15,299 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 7,10,829 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். நாட்டில் 69,811 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, 9.6 சதவீதமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.