நெட்டிசன்

தற்போது இணையவெளி எங்கும் “தோழர்” என்ற வார்த்தை பரவிக்கிடக்கிறது. முதன் முதலில் தமி்ழ்நாட்டில் “தோழர்” என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தியவர், பெரியார் ஈ.வெ.ரா.தான்.

”1932 ஆம் ஆண்டிலேயே ‘தோழர்’ என்றே அழைக்க வேண்டும் என ‘குடிஅரசு’ பத்திரிகையில் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அந்த அறிக்கை இதுதான்.

“இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, “தோழர்” என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, நீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். ‘குடிஅரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

– ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)

(வாட்ஸ்அப் பதிவு)