சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் நாயகன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுள்ளார்.  ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று  தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், அவரது கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  தன்னை முதல்வர் அறிக்கை நாயகன் என்று விமர்சிப்பதாக கூறியவர், ஊழல் நாயகன் எடப்பாடி பழனிச்சாமி என கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், ஊழலற்ற நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்துகிறது. ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.