டெல்லி: நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு பிரதமர் மோடி தலைகுனிந்தார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு ஆவணவத்துடன் செயல்பட்ட பிரதமர் மோடி தலைகுனிந்துள்ளார் என்றும், அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்  என பதிவிட்டுள்ளார்.