தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி..

ஷனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது பிக் பாஸ் புகழ் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார்.

இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து ஷனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வெளிநாட்டில் ஷூட்டிங் சம்மந்தமாக செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை நான் செலவழித்தேன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவும் பலவகைகளில் உதவி புரிந்தேன்.

தர்ஷனின் நண்பர் மற்றும் தர்ஷன் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள். என்னைப்பற்றி பொய்யான கருத்துகளை தர்ஷன் பரப்பி வருகிறார். எனவே தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி,கொலை மிரட்டல் உட்பட வழக்குகளின் கீழ் புகார் கொடுத்துள்ளேன், இந்தப் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று ஷனம் கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் இருந்தால் அவரைக் கொடுக்கச் சொல்லுங்கள். ஷனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரின்தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது உண்மை அல்ல. நானும் ஷெரினும் நல்ல நண்பர்கள் மட்டும்தான்.

மேலும், நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஷனம் கூறியுள்ளார். அதுவும் உண்மையல்ல. இவ்வளவு நடந்த பிறகு அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்டபின் என்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன்” என இதற்கு தர்ஷன் விளக்கமளித்துள்ளார்.