பாங்காக்

முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தாய்லாந்து அரசர் மகா வஜிரலோன்கோம் தனது மெய்காப்பாளர் படை தலைவியை திடீரென மணம் புரிந்துள்ளார்.

கடந்த 70ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் 2016 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார்.   அவருடைய மகனான அரசர் பத்தாம் ராமர் என அழைக்கப்படும் மகா வஜிரலோன்கோம் இந்த வார இறுதியில் முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.

தாய்லாந்து நாட்டு ராணுவப்படையின் பெண் அதிகாரி சுதிடா திட்ஜாய் என்பவரை வஜிரலின்கோம் ராணுவப்படை உயர் அதிகாரியாக கடந்த 2014 ஆம் வருடம் நியமித்தார்.   அவருக்கு அதன் பிறகு மெய்க்காப்பாளர் படை தலைவி பொறுப்பும் வழங்கப்பட்டது.

இருவருக்கும்  இடையில் காதல் உள்ளதாக செய்திகள் பரவின.    ஆனால் அரசர் தரப்பில் இருந்து இந்த செய்தியை ஆமோதிக்கவில்லை.  இந்நிலையில் சுதிடாவை தற்போது 63 வயதாகும் மகா வஜிரலின்கோம் திருமணம் செய்துக் கொண்டதாக ஊடகங்களில் செய்தி கள் பரவின.   அதன் பிறகு அரசவை செய்திக் குறிப்புக்கள் அதை உறுதிப்படுத்தி உள்ளன.

சுதிடா ராணுவத்தில் சேரும் முன்பு தாய் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்தவர் ஆவார்.