சென்னை: தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் இன்று முதல் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வந்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் விரிவாக்கம் பணி, நடைமேடை அமைப்பு போன்ற பல காரணங்களால், தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சில மாதங்களாக புறப்பட்டு வருகிறது. அதுபோல சில ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், புதுச்சேரி பயணிகள் ஆகிய ரயில்கள் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.