சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், இலவச மின்சாரம் வழங்கிடவும், தரமான குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கிடவும், பிளாங் செக், பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களை விவசாயிகளிடம் வாங்குவதை கைவிட வலியுறுத்தியும்,

தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்து இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுத்திடவும் கோழிகளை பண்ணையிலிருந்து ஏற்றிய ஒரு வாரத்துக்குள் கம்பெனிகள் பண வழங்கிடவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல கறிக்கோழி விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டு காலமாக பல வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.  சமீபத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக  தொழில்நுட்ப ஆய்வு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக,  கால்​நடை பராமரிப்​புத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பு: தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்​கப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இத்​தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்​ணை​யாளர்​களும், அவர்​களுக்​குத் தீவனம் மற்​றும் குஞ்​சுகளை வழங்​கும் 66 ஒருங்​கிணைப்​பாளர் ​களும் ஈடு​பட்​டுள்​ளனர். சமீப​கால​மாக உற்​பத்​திச் செலவு அதி​கரிப்பு மற்​றும் இதர சிரமங்​கள் குறித்து பண்​ணை​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து வந்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, கடந்த டிச.29 மற்​றும் ஜன.21 ஆகிய தேதி​களில் கால்​நடை பராமரிப்பு இயக்​குநர் தலை​மை​யில் சங்க நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

பண்​ணை​யாளர்​களின் கோரிக்​கைகளைத் தீர ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்​டத்​தி​லும் தொழிநுட்ப குழு அமைக்​கப்பட்​டுள்​ளது.

இக்​குழு​வினர் பண்​ணை​யாளர்​கள் மற்​றும் ஒருங்​கிணைப்​பாளர்​களு​டன் ஆலோ​சித்​து, உள்​ளீடு​கள், தரம் மற்​றும் செல​வு, உற்​பத்​திப் பெருக்​கத்​துக்​கான வழி​வகைகள், வளர்ப்​புப் பணி​கள் மற்​றும் பண்​ணைச் செயல்​பாடு​களில் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​கள், நோய்ப்​பர​வல் மற்​றும் மருத்​துவ சிகிச்​சையி​லிருக்​கும் இடைவெளி, உற்​பத்தி மற்​றும் கொள்​முதல் ஆகிய​வற்​றிற்​கிடையே​யான பிரச்​சினை தொடர்​பான விவரங்​களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்​புத் தொழில் நடை​பெறும் மாவட்​டங்​களில் அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யரிடம் கலந்​தாலோ​சித்து உரிய தீர்வு காண அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

[youtube-feed feed=1]