ஆசிரியர் தின வாழ்த்து

பா. தேவிமயில் குமார்

 

அரிச்சுவடியும்,
ஆத்திச்சூடியும் அறிய வைத்தும் !

தவறு செய்தால்
தன்மையாய் தண்டிக்கவும்…

எழுத்தாணி பிடிக்கவும்
ஏறுநடை போடவும்…

உன்னால் முடியும்
உயர்ந்து காட்டு எனவும்…

கவலைப்படாதே
காலம் மாறும் என்றும்…

எந்தப் பிள்ளையும்
என் சொந்தப்பிள்ளையெனவும் …

வெள்ளைச் சுவற்றையும்
வானவில்லாக்கவும்…

நீ முன்னேறு நான்
முன்னேராக இருக்கிறேன் எனவும்…

அனேகனாய் மாணவரை
எண்ணி பணி செய்திடவும்…

தவறு செய்யும்போது
தன்மையாய் கண்டிக்கவும்…

எந்தத் தடையும் பெரிதல்ல
என உணர்த்திடவும்…

நல்லது எதுவென
நாளும் உரைத்திடவும்…

நம் முன் நடமாடும் கடவுளாகவும்
நாளும் வளர்ந்திடும் அறிவுமதியாகவும் ,

உலக முன்னேற்றத்தின்
ஒரு மையப் புள்ளியாகவும்

விளங்கிடும் ஆசிரியர்களே !
உம்மை வணங்குகிறோம் !