சென்னை:
சிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடக்கம் செய்யப்பட்டதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் ஆயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை முதல் 2 வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.