புதுடெல்லி:

சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே மொத்த மூலதன சந்தை மதிப்பாகும். அதன்படி தற்போது 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் 6,53,767 கோடி ரூபாயாக அதன் சொத்து மதிப்பு உள்ளது. பாகிஸ்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட இது அதிகமாகும்.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4வது காலாண்டில் டிசிஎஸ் நிகர லாபம் நான்கரை சதவீதம் அதிகரித்து 6,925 கோடியாக உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து அதன் பங்கு விலையும் 6 சதவீதம் வரை அதிகரித்தது. தற்போது உலக அளவில் மதிப்புமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் டிசிஎஸ் 97வது இடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இடத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 10.79 சதவீதம் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மதிப்பீடு ரூ.7 கோடியே 95 லட்சமாக குறைந்துள்ளது.