ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது 82வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஹாலந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில், இதில் இந்தியாவின் ஆனந்த், நார்வே நாட்டின் கார்ல்ஸன் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் பங்கேற்கின்றனர்.

இத்தொடரின் ஐந்தாவது சுற்றுப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஜெப்ரி ஜியாங்கை சந்தித்தார். இப்போட்டியில் ஆனந்த் பயன்படுத்தியது வெள்ளை நிறக் காய்கள்.

இப்போட்டியில் ஆனந்தின் ஆதிக்கம் தொடக்கம் முதலே இருந்தது. போட்டியின் 43வது நகர்த்தலில் ஆனந்த் வெற்றிபெற்றார். அவருக்கு இத்தொடரில் கிடைத்த முதலாவது வெற்றியாகும் இது.

தான் விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றி, 3 டிரா மற்றும் 1 தோல்வியுடன் மொத்தமாக 2.5 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் இருக்கிறார் ஆனந்த்.

மொத்தமாக 3.5 புள்ளிகளுடன், அமெரிக்காவின் சோ வெஸ்லே, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.