ட்டாவா

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வின் லிபரல் கட்சி 150 இடங்களைப் பெற்ற போதும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.   மீண்டும் பிரதமரான ஜஸ்டின் ட்ருடோ வின் அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.   இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தந்தை தமிழ்நாட்டை சேர்த்தவர் ஆவார்.  தாயார் பஞ்சாப் மாநிலத்தவர் ஆவார்.  முந்தைய பாதுகாப்பு அமைச்சரான ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கனடாவின் பாதுகாப்புத்துறையில் எழுந்த  பாலியல் புகார்களை ஜர்ஜித் சஜ்ஜன் சரிவர் கையாளவில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அதே வேளையில் ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிதா ஆனந்த் பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் அவர் முக்கிய பங்காற்றினார். லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் ஆவார்.