சென்னை: தமிழ்நாடு வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்த  டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுதும் தீவிரப்படுத்தும என்றும்,  டிசம்பர் மாதத்தில் உறுதியாக தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கிறது.

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தினசரி வானிலை அனுமானம்| தேதி: 08.12.2025| காலை 8 மணி நிலவரம்‘

==> தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
==> அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் நோக்கி இத்தாழி நகரக்கூடும்.
இன்றைய வானிலை (08.12.2025)
==> தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.12.2025) வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம்.
==> பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
==> நாளை (09.12.2025) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோர பகுதிகளில் மழை துவங்கி இரவு நேரத்தில் பரவலாகும்.
==> குறிப்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் டிசம் 10,11 விட்டு விட்டு மழை பதிவாகும். வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
==> வடமாவாட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து பணிகளையும் திட்டமிடலாம்.
இவ்வாறு குறிப்பிபட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த ஆட்டம் தொடங்கவுள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழை காத்திருப்பதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் புயலோடு ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை, நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருத்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. முதலில் தென் மாவட்டங்களில் மழை கொட்டிய நிலையில், அடுத்து டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அருகே வலு குறைந்த நிலையில் வந்த டிட்வா, தன்னை வலுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இதனையடுத்து கடந்த 4 நாட்கள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது.

==> அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
==> இத்தாழ்வு நிலையுடன் இணைந்த ஈரபதமிகுந்த கீழைக்காற்று இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
==> இதன் காரணமாக 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும்.
======================================×
காவிரி டெல்டா மாவட்டங்கள் (டிசம் 9 முதல் டிசம் 12 வரை):
==> நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 9 முதல் 12 வரையிலாக தேதிகளில் அநேக இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
==> மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஒரிரு கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்கள் (டிசம்பர் 10 அல்லது 11):
==> தென் கடலோர மாவட்டங்களான #புதுக்கோட்டை, #இராமநாதபுரம், #தூத்துக்குடி, #திருநெல்வேலி, #கன்னியாகுமரி, #தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
==> #சென்னை, #செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் ஒரிரு முறை மழை எதிர்ப்பார்க்கலாம்.
==> மேற்கு மாவட்டங்கள் & உள் மாவட்டங்களிலும் லேசான/மிதமான மழைக்கு தான் வாய்ப்பு. பரவலான மழை வாய்ப்பு இல்லை.
டிசம் 9 முதல் 12 காலை வரை இந்த 5ம் சுற்று மழை காவிரி டெல்டா மாவட்டங்களை பிரதானமாக வைத்து பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுதும் தீவிரப்படுத்தும்.
டிசம்பர் மாதத்தில் உறுதியாக தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் (டிசம் 9 முதல் டிசம் 12 வரை):

நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 9 முதல் 12 வரையிலாக தேதிகளில் அநேக இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும் என தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஒரிரு கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாவட்டங்கள் (டிசம்பர் 10 அல்லது 11)
தென் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் ஒரிரு முறை மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அடுத்ததாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுதும் தீவிரமாகும் என கூறியுள்ளவர், டிசம்பர் மாதத்தில் உறுதியாக தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கிறது என டெல்டா வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
டிசம்பர் 12 ஆம் தேதி வாக்கில் உயர் அழுத்தம் (வறண்ட காற்று) உருவாகும், இது மத்திய இந்தியா முழுவதும் ஒரு சிறிய குளிர் அலை போன்ற சூழ்நிலையை உருவாக்கும், மேலும் அதன் செல்வாக்கு KTCC (சென்னை) மற்றும் வடக்கு TN இல் காணப்படும்.
பெங்களூரு – ஓசூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12 C ஆகக் குறையும், ஊட்டி கொடை இந்த காலகட்டத்தில் 5 C க்கும் குறைவாக இருக்கும். வேலூர், திருப்பத்தூர் சேலம் ஈரோடு, கோயம்புத்தூர், தர்மபுரி ஆகிய இடங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை இருக்கும். டிசம்பர் மாத காலநிலைக்கு மேற்கு கடற்கரை நகரங்கள் வெப்பமான வானிலையால் சூழப்படும்  என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.