டெல்லி:   தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்”  என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லைஎன்று  7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தத போது, ,  பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு  3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி  சட்டம் இயற்றப்பட்டது.   இந்த  3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று  தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

தமிழ்நாட்டை தொடர்ந்து, பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் இதுபோன்ற இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டன.  வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்பு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதனப்டி,   பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள்ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் உள் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது.   பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் தமிழ்நாட்டிலும் அருந்ததியினருக்கு  3 சதவிகித  உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள்ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…