சென்னை: தொழில்நகரமான ஓசூரில், ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, சென்னை ஓஎம்ஆர் சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதுபோல், ஓசூர் அருகில் உள்ள பாகலுார் பைபாஸ் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, சாட்டிலைட் ரோடு ஆகிய சாலைகளின் இரு புறங்களிலும், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு, கர்நாடக பார்டர் பகுதியான, தொழில்நகர் ஓசூசூரில் தொழில்நிறுவனங்கள் குவிந்து வரும் நிலையில், அந்நகரத்தை மேலும் உயர்த்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலைகள், ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, ஒசூர் அறிவுசார் பெரு வழித்தடம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இநத வழித்தடத்தில், திறன் மையங்கள், ஐ.டி. நிறுவனங்கள், உயர்தர ஆராய்ச்சி மையங்கள் அறிவுசார் வழித்தடத்தில் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வெளிவட்ட சாலை இருபுறத்திலும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
இதற்காக கிருஷ்ணகிரி – பாகலூர் புறவழிச்சாலையில் 30 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது மேலும், ஓசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பாகலுார் பைபாஸ் உள்ளிட்ட மூன்று சாலைகளில், ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற தொழில் துவங்க, உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதற்கான உள்கட்டமைப்பு பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் விரைவில் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.