சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

வேந்தர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புதிய சட்டத்தின்படி காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
துணை வேந்தர்களை நியமிக்கும், நீக்கும் மசோதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது.