சென்னை; 19 ரயில் நிலையங்கள் உடன் சென்னை கோயம்பேடு – முதல் ஆவடி அடுத்த பட்டாபிராம் வரையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி இரண்டரை லட்சம்  முதல் 3 லட்சம் பேர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தற்போது, தற்போது, சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் பச்சை, நீல வழித்தடங்களில் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இது மக்களின் போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்துக்கு வழிவகுத்து வருகிறது. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் முன்னதாக சமா்ப்பித்தது.

மேலும்,  தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகளை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில், தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலான 21 கி.மீ. தொலைவுக்கு புதிய வழித்தடமும் கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான 6 கி.மீ. தொலைவுக்கு புதிய வழித்தடத்தை விரிவாக்கம் செய்யவும் திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

இந்த நிலையில்,  கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை கோயம்பேடு – பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 19 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.

. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு – ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் படி, கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது. இது அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூா் ஓ.டி. ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.