Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

தொழில்செய்ய வாருங்கள்: 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு

Jun 2, 2020

சென்னை:

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள், ஊக்க சலுகைகளை வழங்குகிறோம் என்று 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு’வை தலைமை செயலாளர் க.சண்முகம் தலைமையில் அமைத்துள்ளார்.

அண்மையில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ‘யுனைடெட் டெக்னாலஜி’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி கிரிகோரி ஜே ஹேயஸ், ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி லாரன்ஸ் கல்ப், ‘போயிங்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி தவே கல்ஹவுன், ‘லாக்ஹீட் மார்டின்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி மரிலின் ஹீவ்சன், ‘சாப்ரான்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி பிலிப் பெட்டிட்கோலின், ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி வாரன் ஈஸ்ட், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைலம் பவுரி, ‘லியானார்டோ’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி அலெசாண்ட்ரோ புரபியுமோ மற்றும் ‘ஹனிவெல்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி டேரிபஸ் ஆடம்சைக் ஆகிய 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LmZZeUhfQW1LSlpZ தர்மேந்திராவுக்கு முதல் ஹிந்தி பட வாய்ப்பு எப்படி  வந்தது?#dharmendra #bollywood #kantharaj #kamalhaasan
தர்மேந்திராவுக்கு முதல் ஹிந்தி பட வாய்ப்பு எப்படி  வந்தது?#dharmendra #bollywood #kantharaj #kamalhaasan
தர்மேந்திராவுக்கு முதல் ஹிந்தி பட வாய்ப்பு எப்படி  வந்தது?#dharmendra #bollywood #kantharaj
#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
மாணவர்கள் யாருக்கு முன்னுரிமை தரனும் என M. R. ராதா கூறினார்? #saibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..#saibaba #omsairam
Load More... Subscribe

Post navigation

வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனை
’’தமிழ்நாட்டில் இனிமேல் முடி வெட்டவும்  ஆதார் தேவை’’

Related Post

ஆன்மிகம் தமிழ் நாடு

கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது – தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! பவன் கல்யாண்

தமிழ் நாடு

ரயில்வே கவுண்டர்களில் ‘தட்கல் டிக்கெட்’ முன்பதிவுக்கு இனி OTP கட்டாயம்! இந்தியன் ரயில்வே

தமிழ் நாடு

இன்னோவா புகழ் ‘நாஞ்சில் சம்பத்’ விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் !

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer