
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தமிழ் நடிகை கரோலின் புனேவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாடா செல்லம்’. இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், கரோலின் நாயகியாகவும் நடித்தனர். பிறகு நாயகி கரோலின், ஆடை மற்றும் நகைக் கடை விளம்பரங்களிலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து இன்று கரோலின் கைது செய்யப்பட்டார். அவர் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் கைது செய்யப்பட்டதாகவும் மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையில், தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]