சென்னை: பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது என புதிய தமிழகம்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

“10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்ததீர்ப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிட்டி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், தமிழகஅரசு பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என கூறினார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,   பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது. நீதிமன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு” என  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது. நீதிமன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு” என கூறி உள்ளார்.