சென்னை: சவுக்கு மீதான  தமிழ்நாடு அரசின் 16 வழக்குகளின் விசாரணைக்கு  தடை விதித்த உச்சநீதிமன்றம்,  சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கியதற்கு மறுதினமே மீண்டும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரிய சவுக்கு சங்கரின் ரிட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் அவரது குடும்பத்தின் மீதான ஊழர் புகார்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரபல யுடியூபர்  சவுக்குசங்கரை பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு கைது செய்து சிறையில் அடை்த்து, நடவடிக்கை எடுத்தது. மேலும், அவர்மீது குண்டம் சட்டமும் போடப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள், அவருக்கு ஜாமின் வழங்கியது்ன் அவர்மீதான  குண்டர் சட்டத்தையும் உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. விசாரணையின்போது,  சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்றும்,   மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது  என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே இதுபோன்ற உச்சநீதிமன்றமும்அரசின் எந்தவொரு முடிவையும் விமர்சிக்க குடிமகனுக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தது.

ஆனால், நீதிமன்றங்களின் தீரப்ப்பை ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் மதிக்காத்த போக்கே தொடர்ந்து வருகிறது. சவுக்கு  சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர்மீது குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏவி, அவரை சிறையிலேயே  வைத்துள்ளது.

இதையடுத்து,  சிவகங்கையில் நீதிமன்றம் முன் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “சென்னையில் கார் பந்தயம் நடத்தி முடிக்கும் வரையில் நான் ஜெயிலை வெளியே வரக்கூடாது என உதயநிதி உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் நான் தினம் தினம் புதிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுவருகிறேன். என் மீதான எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்” என்றார்.

இதைத்தொடர்ந்து,  தனக்கு எதிராக தமிழக அரசால் பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சவுக்கு மீதான 16 வழக்குகளின் விசாரணை அதிரடியாக தடை விதித்த உத்தரவிட்டு. மேலும், இந்த வழக்குகளின் மீது எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ம் வழக்கை அடுத்தவாரத்துக்கு ஒத்தி வைத்தது.

இதற்கிடையில் சவுக்கு சங்கர்மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்,  சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கியதற்கு மறுதினமே மீண்டும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதா? என கேள்வி எழுப்பியதுடன்,  அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் என்னென்ன? தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

குண்டர் சட்டம் ரத்து: சவுக்கு சங்கர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால் விடுதலை செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்